சமர்ப்பணம்


சமர்ப்பணம்
ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ

Thursday 28 March 2013

பாப்பா பாட்டு ஸௌராஷ்ட்ரா நந்தவனம்

           ஸௌராஷ்ட்ர நந்தவனம் பாப்பா ---இங்கு
                  ஸகலமும் உண்டடி பாப்பா!
           பாராட்டிப் போற்றத் தகும் --- பாவலர்
                 பலரும் நிறைந்த நந்தவனம்!
                                    (ஸௌராஷ்ட்ர)--1--
           
           நீதி ஸம்பு மணக்கும் -- ராமராயின்
                 நந்தி நிகண்டும் சிறக்கும்!
           மீதி நூல்கள் எண்ணின் -- அங்கே
                 மேனி சிலிர்க்கும்....அப்பப்பா!
                                                    (ஸௌராஷ்ட்ர)-2--
           
           பஞ்சல் சரித்ரு ஒலிக்கும் ---அழகரார்யர்
               படைப்பெலாம் கனிந்து சிறக்கும்!
           ஊஞ்சல் ஆடிடும் சுகம்போல் -- நாயகி
               வள்ளல் கீர்த்தனைகள் இனிக்கும்!
                                       (ஸௌராஷ்ட்ரா)--3--
           
           வேங்கட ஸூரிராமா யணம் --தினம்
               செய்யணும் பாரா யணம்!
           பாங்குடன் காவியம் செய்த -- பாவலர்
               பலரும் வளர்த்த நந்தவனம்!
                                    (ஸௌராஷ்ட்ர)--4--
        
           நாளும் இவற்றைக் கற்றிடு -- பாப்பா 
              நாளும் முயன்றிதைப் போற்றிடு!
          வாழ்வுக் கதுவழி காட்டிடும் -- உன்
              தாழ்வுக் குறியெலாம் ஓட்டிடும்
                                   (ஸௌராஷ்ட்ரா)--5--
   

              *** பாஷாபிமானி --1975 இல் பிரசுரமானது.மாதம் நினைவில்லை.

No comments:

Post a Comment