ஸௌராஷ்ட்ர நந்தவனம் பாப்பா ---இங்கு
ஸகலமும் உண்டடி பாப்பா!
பாராட்டிப் போற்றத் தகும் --- பாவலர்
பலரும் நிறைந்த நந்தவனம்!
(ஸௌராஷ்ட்ர)--1--
நீதி ஸம்பு மணக்கும் -- ராமராயின்
நந்தி நிகண்டும் சிறக்கும்!
மீதி நூல்கள் எண்ணின் -- அங்கே
மேனி சிலிர்க்கும்....அப்பப்பா!
(ஸௌராஷ்ட்ர)-2--
பஞ்சல் சரித்ரு ஒலிக்கும் ---அழகரார்யர்
படைப்பெலாம் கனிந்து சிறக்கும்!
ஊஞ்சல் ஆடிடும் சுகம்போல் -- நாயகி
வள்ளல் கீர்த்தனைகள் இனிக்கும்!
(ஸௌராஷ்ட்ரா)--3--
வேங்கட ஸூரிராமா யணம் --தினம்
செய்யணும் பாரா யணம்!
பாங்குடன் காவியம் செய்த -- பாவலர்
பலரும் வளர்த்த நந்தவனம்!
(ஸௌராஷ்ட்ர)--4--
நாளும் இவற்றைக் கற்றிடு -- பாப்பா
நாளும் முயன்றிதைப் போற்றிடு!
வாழ்வுக் கதுவழி காட்டிடும் -- உன்
தாழ்வுக் குறியெலாம் ஓட்டிடும்
(ஸௌராஷ்ட்ரா)--5--
*** பாஷாபிமானி --1975 இல் பிரசுரமானது.மாதம் நினைவில்லை.
சமர்ப்பணம்
சமர்ப்பணம் | |
![]() | ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ |
Thursday, 28 March 2013
பாப்பா பாட்டு ஸௌராஷ்ட்ரா நந்தவனம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment